கைது செய்யப்பட்ட அகதிகள்
Read Time:45 Second
தமிழகத்திற்கு அகதிகளாக செல்லவிருந்தபோது தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த புதன்கிழமை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட திருமலையைச் சேர்ந்த 115பேர் நேற்றுபிற்பகல் தலைமன்னார் பங்குத்தந்தை அன்டனிதாஸ் வலிமாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது புனித லோரன்ஸ்சியா ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களையம் சேர்த்து மொத்தம் 156பேர் கடற்படையினரால் பங்குத்தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.