இந்தோனேசியாவில் பாரிய பூகம்பம்
Read Time:1 Minute, 7 Second
இந்தோனேசியாவின் யாவா தீவில் இன்று அதிகாலை இடம்பெற்ற 6.2 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம் 1325பேர் உயிரிழந்திருப்பதாகவும், நு}ற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும் இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.
புவியதிர்ச்சியினால் இடிந்து வீழ்ந்த கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாமென அஞ்சப்படுகிறது. ஆயினும் இதனால் சுனாமி ஏற்படவில்லையென்று யகர்த்தாவிலுள்ள பூமியதிர்ச்சி தொடர்பான ஆய்வுநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.