பிரபாகரனை எதிர்க்கிறேன், ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறேன் – ஜெ.ஜெயலலிதா

Read Time:2 Minute, 3 Second

jaya10ஈழத்தில் நடந்து வரும் தீவிரவாதத்தை எதிர்க்கிறேன். இதனால் பிரபாகரனை எதிர்க்கிறேன். அதேசமயம், ஈழத் தமிழர்களின் உரிமைகளையும், அவர்களது போராட்டத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. நாகர்கோவிலில் நேற்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. நிலைப்பாடு என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஈழத் தமிழர்களுக்கு அ.தி.மு.க. என்றுமே ஆதரவு தான். ஆனால் அங்கு நடக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக உள்ளோம். அதனால் பிரபாகரனை எதிர்க்கிறோம் என்றார். சேது சமுத்திரத் திட்டத்தை முதலில் ஆதரித்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன்? என்று கேட்டதற்கு, மீனவர்கள் நலனுக்கு எதிரான திட்டமாக சேதுசமுத்திர திட்டம் இருப்பதால் அதனை நாங்கள் எதிர்க்கிறோம் என்று விளக்கினார் ஜெயலலிதா. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேராததால், தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க.வின் நிலை என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்கு, எங்களது நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக வின் சக்தி தேர்தலுக்குப் பின் தெரிய வரும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

12 thoughts on “பிரபாகரனை எதிர்க்கிறேன், ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறேன் – ஜெ.ஜெயலலிதா

  1. இது தான் இன்று பெரும்பாலான தமிழரின் நிலை…
    புலிகள் எமக்கு தேவையில்லை…

    தமிழ் மக்களின் நலனில் யாருக்கு அக்கறையோ அவர்களே தமிழரின் பிரதிநிதிகள்..

  2. please tell to us “Who is Tamil freedom fighters?…………..come on mannnnnnnn

  3. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    ஈழ மக்கன்
    தயவு செய்து அடிப்படை ஆங்கில அறிவு இல்லாமல் ஆங்கிலத்தில் எழுதி உனது சட்டியில் என்ன இருக்குது என்று அகப்பையில் எடுத்து உலகத்துக்கு காட்டாமல்
    நல்ல உனக்கு தெரிந்த தமிழில் எழுது
    இன்று பிள்ளை பிடிகார பிரபாகரனின் இரும்புப் பிடியில் இருக்கும் இலங்கை மக்களை தமது உயிர் கால் கையை பயணம் வைத்து மீட்கும் இலங்கை படையினரே
    உண்மையான விடுதலைப் போராளிகள்

  4. Please tell us ” who are tamil freedom fighters”
    சிறு தவறு.. பெரிதாக்க தேவையில்லை..

  5. thambiah you are nasty thumbiah…why are live in alambil? go to hell…nasty thumbiah…

  6. துவங்கிவிட்டாங்க ஐயா…துவங்கிவிட்டாங்க

    நீ தமிழ் ரத்தமா? தமிழனுக்கு பிறந்தாயா? சிங்களவனுக்கு பிறந்தாயா?

    இதைவிட்டா உங்களிடம் வேறு ஒண்டும் இல்லையா? கருத்து போர் செய்ய முடியாதா?

    என்று தணியும் இந்த புலி பாசிச நம்பிக்கை……

  7. ஒட்டுண்ணி…
    தம்பையாவைக் கேள்வி கேட்கிற மாதிரி… பிரபாவையும் கேள்வி கேட்கிற மனத் தைரியத்தை கடவுள் உமக்கு அருள்வாராக!

    சாமானியன்…
    உனக்குத் தமிழ் இரத்தம் இருக்கா? இருக்கா? என எத்தனை அப்பாவித் தமிழர்களைக் கொன்றுவிட்டீர்கள். கொஞ்சம் அடக்குங்கள் உங்கள் இரத்த தாகத்தை…

  8. noooo.. this THUMBIAH is realy mixed with something!!! 100% sure…alambilil irunthu alambaamal nee po Thumbiah…

  9. தமிழ் மண்ணை ஆக்கிரமிக்கின்ற சிங்களப் படையினர்தாம் உண்மையான விடுதலைப் போராளிகள் என்றால் விடுதலை என்பதற்கும் போராளிகள் என்பதற்கும் உங்கள் அகராதியில் என்ன பொருள்? சீ… தூ…

  10. எட்டாப்பழம் புளிக்கும்…. சீ… தூ…
    ஹிஹி

  11. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    விடுதலைப் புலி உண்மையில் விட்டில் பூச்சியா

    அரசியலும் சூனியம் ராணுவமும் சூனியம்
    சூனியம் பிடித்த நரபலி நரியனால்
    ஈழம் வரும் என்று கனா கண்ட புத்தி பேதலித்த முட்டாள்களுக்கு இழவு வீட்டைத்தான் பீலா பிரபாகரன் பெற்று கொடுத்திருக்கிறான்

    இத்தனை இழப்புக்கு பிறகும் ஈழம் வரும் என்று பிலிம் காட்டி பீலா விட்டு உங்கள் பிழைப்பையும் பிள்ளைகளையும் அபகரித்து, எங்கள் பிள்ளைகள் செருப்பும் இல்லாமல் சுடுபட்டு பங்கர்களிலும் புதை குழிகளிலும் அழுக பிணம் தின்னி மா பெரும் தேசத் துரோகி பிரபாவின் பிள்ளை மட்டும் அழகாக பாதுகாப்பாக எங்க பணத்தில் வாழ
    எத்தனை நாளுக்கு இந்த பிலிம் பீலா எல்லாம்

    இன்று இலங்கைத் தமிழரை காத்தது காப்பாற்றியது இலங்கை படைகளே

    வெளி நாட்டில் புலியின் பிலிமையும் பீலாவையும் வித்து புலிக் காசில் வாழும்
    அறிவு கெட்ட புல்லுருவி புக்கா மடையர் இப்ப எங்க உறவு களே அவேர் லீடேர் பிரபாகரன் வீ வோன்ட் தமிழ் ஈழம் என்று தெரு தெருவாக ஊளையிட்டு திரியிதுகள்

Leave a Reply

Previous post கொணாமுல்லையில் காணாமல் போன இரு சிறுவர்களில் ஒருவரது சடலம் பொலிஸாரால் மீட்பு
Next post போரை நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்: தமிழ் தேசிய கூட்டணி