போரை நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்: தமிழ் தேசிய கூட்டணி
இலங்கையில் நடைபெறும் போரை முற்றிலுமாக நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டுமென்று விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டணி கேட்டுக் கொண்டுள்ளது. இக் கூட்டணியின் தலைவர் ஆர். சம்பந்தம் இது குறித்து தில்லியில் வெள்ளிக்கிழமை கூறியது: இலங்கைப் போர் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ள கருத்துகளை நாங்கள் வரவேற்கிறோம். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இனிமேலும் போரைத் தொடர இலங்கை அரசுக்கு எந்த காரணமும் இல்லை என்று பிரணாப் கூறியுள்ளார். நாங்கள் இலங்கையில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து இந்திய அரசிடம் தெளிவாக விளக்கியுள்ளோம். எங்கள் கருத்துகளை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. ஈழத் தமிழர்களின் உணர்வுகளையும் இந்திய அரசு புரிந்து கொண்டுள்ளது என்றார் அவர். புலிகள் குற்றச்சாட்டு: இந்நிலையில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.நா.வும், இந்திய அரசும் உதவியாக இருந்துள்ளன என்று புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்திய அரசும், ஐ.நா. அமைப்பும் மெüனமாகவும், உரிய நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருந்தன் மூலம் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தார்கள் என்று புலிகள் ஆதரவு தமிழ் நெட் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
One thought on “போரை நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்: தமிழ் தேசிய கூட்டணி”
Leave a Reply
You must be logged in to post a comment.
தமிழ் தேசிய கூட்டணி புளிசளின் வால்கள்…அவர்களை நாம் கருத்தில் கொள்ள தேவையில்லை…
உண்மையாக நேர்மையாக அவர்கள் பாராளுமன்றம் போகவில்லை…