அக்கரைப்பற்றில் கணவன் மற்றும் மனைவி வெள்ளைவானில் வந்தோரால் கடத்தல்
Read Time:1 Minute, 20 Second
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கணவனும் மனைவியும் இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது கால்நடை வியாபாரியான சின்னத்துரை கீர்த்தி (வயது50) மற்றம் அவரது மனைவி மகேஸ்வரி வயது54 ஆகியோரே கடத்தப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை கணவன் தனது தொழிலின் நிமிர்த்தம் வெளியே சென்று வீடுதிரும்பும் வழியில் வெள்ளைவானில் வந்தோர்களால் கடத்தப்பட்டதாகவும் இச்சம்பவம் இடம்பெற்று 4ம் நாள் வெள்ளிக்கிழமை இரவு மனைவி வீட்டிலிருந்த வேளை வெள்ளைவானில் வந்தோர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது இவர்கள் தொடர்பாக இதுவரைகாலமும் தகவல் இல்லை கணவனின் மோட்டார் சைக்கிள் மட்டும் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
Average Rating