கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்
Read Time:1 Minute, 16 Second
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கேகாலை உடுப்பிட்டிய பகுதியில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றிபெற்ற குழுவினர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட இருவரை பார்வையாளர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் இருவரும் இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர்கள் எனவும் இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி புலிகளுடையது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த கேகாலை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Average Rating