விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை கண்காணிக்க பாலித்த கொஹன மலேசியா விஜயம்
Read Time:1 Minute, 20 Second
விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்கும் நோக்கில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித்த கொஹன மலேசியாவிற்கு விஜயம் செய்துள்ளார் மலேசியாவில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் உயர்வடைந்து செல்வதாக கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவல்களையடுத்து கொஹன அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொடுக்கல்கள் வாங்கல் தென் கிழக்காசிய நாடுகளை மையப்படுத்தி நடத்தப்பட்டு வருவதாக அரசங்கம் nரிவித்துள்ளது மேலும் இறுதிக்கட்ட போரட்டங்களின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மலேசியாவில் தஞ்சமடையக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன தமிழீழ விடுதலைப் புலிகள் மலேசியாவில் ஊடுருவுவதனை தடுக்கும் நோக்கில் பாலித்த கோஹனே அந்நாட்டு அதிகரிகளிடம் பேச்சுவார்தை நடத்த உள்ளார்
One thought on “விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை கண்காணிக்க பாலித்த கொஹன மலேசியா விஜயம்”
Leave a Reply
You must be logged in to post a comment.
புலிகளே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றும் அவர்களின் தனிநாட்டுக் கொள்கையைப் பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்றும் கட்டி வளர்க்கப்பட்ட பொய்த் தோற்றம் படையினரின் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த பின் ஒன்றன்பின் ஒன்றாக உடைந்துவிட்டது.
புலிகளுக்கு ஆதரவாக மக்கள் எந்த இடத்திலும் அணிதிரளவில்லை. புது மாத்தளனில் உள்ளவர்கள் புலிகளுக்கு ஆதரவாகவே தங்கியிருக்கின்றார்கள் என்ற பொய்மையும் கடந்த திங்கட்கிழமை உடைந்துவிட்டது. இப்போது தமிழ் மக்களின் அரசியலில் புதிய சிந்தனையும் புதிய தலைமையும் தேவை.