படை நடவடிக்கைகளுக்கு விமானப்படையினர் கண்காணிப்பு வழங்கி உதவி -ஜனக்க நாணயக்கார
புதுமாத்தளன் பகுதியில் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு விமானப் படையினர் கண்காணிப்பு வழங்கி உதவி வருகின்றனர். இதுதொடர்பிலான காணொளிகள், புகைப்படங்கள் என்பன ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டும் தரவேற்றப்பட்டும் இருந்தன இவ்வாறு விமானப்படைப் பேச்சாளர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 20ம் திகதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து மக்கள் வந்தபோது இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்த 238சிவிலியன்கள் விமானப்படையினரின் உதவியுடன் அநுராதபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்காக உணவுப் பொருட்களையும் அநுராதபுரத்திலிருந்து விமானப்படையினர் கொண்டு வந்துள்ளனர் இன்று கொழும்பு விமானப்படைத் தளத்திலிருந்து சில அத்தியாவசிய பொருட்கள் கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன என்றார்.
Average Rating