மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை
Read Time:1 Minute, 18 Second
மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைமுதல் வழங்கப்படும் இந்த விடுமுறையானது எதிர்வரும் 27ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ள மேல் மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டே அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கத் தீர்மானித்ததாகவும் கல்வித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை விருப்பு வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்களாக விளங்கும் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 28ம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலுள்ள ஆறு பாடசாலைகள் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக இயங்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
Average Rating