சேனைக்குடியிருப்புப் கிராமத்தில் அமைந்துள்ள அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் காரியாலயம்மீது தாக்குதல், ஒருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்
Read Time:1 Minute, 21 Second
அம்பாறை மாவட்டம் கல்முனை காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த சேனைக்குடியிருப்புப் கிராமத்தில் அமைந்துள்ள அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காரியாலயத்தின்மீது நேற்றிரவு 10மணியளவில் துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் கிரனைட் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலின்போது கட்சி உறுப்பினர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20வயதுடைய லயன் விஜய் என்கிற வீரமாறன் என்பவரே இதன்போது உயிரிழந்தவர் என்றும், 20வயதுடைய சிறீஸ்கந்தராஜா என்பவரே படுகாயமடைந்தவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது படுகாயமடைந்தவர் கல்முனை அஷ்ரப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கல்முனைக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating