இலங்கை விவகாரம் குறித்து மூடிய கதவு பேச்சுவார்த்தை நடத்த ஐ.நாவிற்கு உரிமையில்லை -இலங்கை அரசாங்கம்
Read Time:1 Minute, 6 Second
இலங்கை விவகாரம் குறித்து மூடிய கதவு பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவைக்கு எவ்வித உரிமையும் இல்லை என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூனுக்கு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் பிரித்தானிய காலனித்துவத்திற்கு அடிமைப்பட்ட ஓர் நாடு அல்ல எனவும் இறையாண்மையுடைய ஓர் நாடு எனவும் அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது செயலாளர் நாயகம் பான் கீ மூன் பிரித்தானிய பிரதிநிதி டெஸ் பிரவுன் மற்றும் அமெரிக்கப் பிரதிநிதி அலவென்தோ வுல்ப் உள்ளிட்டோருக்கு இடையில் மூடிய கதவு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளமை தொடர்பாகவே இலங்கை அரசாங்கம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
One thought on “இலங்கை விவகாரம் குறித்து மூடிய கதவு பேச்சுவார்த்தை நடத்த ஐ.நாவிற்கு உரிமையில்லை -இலங்கை அரசாங்கம்”
Leave a Reply
You must be logged in to post a comment.
May be very cold that is what they closed the doors. Next time they will let the doors open.