சுடரொளி பத்திரிகை பிரதம ஆசிரியர் வித்தியாதரன் நீதிமன்றத்தினால் விடுதலை
Read Time:1 Minute, 4 Second
கொழும்பிலிருந்து தினசரி வெளியிடப்படுகின்ற சுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் கொழும்பு நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டார். கொழும்பில் கடைசியாக இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல் தொடர்பில் வித்தியாதரன் 26-02-2009 அன்று குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று கொழும்பு நீதிமன்றில் ஆஜர் படுத்தியிருந் தபோது அவர் மீது விதிக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Average Rating