இன்று 161 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் மேல்மாகாணசபைத் தேர்தல்
இன்று மேல்மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 38அரசியல் கட்சிகளும் 23 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதில் கொழும்பு மாவட்டத்தில் 19அரசியல் கட்சிகளும், கம்பஹா மாவட்டத்தில் 11அரசியல் கட்சிகளும், களுத்துறை மாவட்டத்தில் 10அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன. கொழும்பு மாவட்டத்தில் 13சுயேட்சைக் குழுக்களும், கம்பஹா மாவட்டத்தில் 04சுயேட்சைக் குழுக்களும், களுத்துறை மாவட்டத்தில் 06சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இதேவேளை மேல்மாகாணத்தில் 161மாகாணசபை உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக இந்தத் தேர்தல் நடைபெறுகின்றது. இவர்களில் கொழும்பு மாவட்டத்திலிருந்து 102உறுப்பினர்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 39உறுப்பினர்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 20உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
Average Rating