விடுவிக்கப்படாத பகுதிகளிலிருந்து இதுவரையில் 1லட்சத்து 75ஆயிரத்து 514பேர் வருகை
Read Time:1 Minute, 15 Second
விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இதுவரை 1லட்சத்து 75ஆயிரத்து 514பேர் வந்தடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் கடந்த மூன்று நாட்களில் 1லட்சத்து 3ஆயிரத்து 143பேர் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்தடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகமையம் அறிவித்துள்ளது. கடந்த 20ம் திகதி மாத்திரம் 42ஆயிரத்து 316பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்ததாகவும், 21ம் 22ம் திகதிகளில் 20ஆயிரத்து 123பேர் வந்தடைந்துள்ளதாகவும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இவர்களுக்கு தேவையான மருத்துவ, சுகாதார வசதிகள் வழங்கப்பட்டு வருவதுடன், அவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Average Rating