போலி அடையாள அட்டை வைத்திருந்த மட்டக்களப்பைச் சேர்ந்தவர் கைது
Read Time:1 Minute, 5 Second
போலி அடையாள அட்டையுடன் காணப்பட்ட ஒருவர் செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் இவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் எனவும் இவரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களின் தழும்புகள் காணப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார் தான் கருணா தரப்பைச் சேர்ந்தவர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார். கண்டியில் நிகழ்ந்த மரணச் சடங்கில் கலந்து விட்டு திரும்பிச் சென்று கொண்டிருந்த வேளையிலேயே அலவத்துகொடவில் வைத்து பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளின் பொருட்டு இவர் தடுத்து வைக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating