தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.. அரசாங்கம் தெரிவிப்பு -திவயின தகவல்
Read Time:1 Minute, 20 Second
விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களான ஜோர்ஜ் மற்றும் தயாமாஸ்டர் ஆகியோருக்கு எதிராக வழக்குத்தொடரப்படும் என திவயின செய்திவெளியிட்டுள்ளது தயாமாஸ்டர் விடுதலைப் புலிகளின் ஊடகப்பேச்சாளராகவும் ஜோர்ஜ் மொழி பெயர்ப்பாளர்களாகவும் கடமையாற்றியதாக புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தல் படுகொலை சம்பவங்களை மூடிமறைத்தல் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக செயற்படல் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக செயற்படல் ஊடகங்களுக்கு பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக திவயின சுட்டிக் காட்டியுள்ளது
One thought on “தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.. அரசாங்கம் தெரிவிப்பு -திவயின தகவல்”
Leave a Reply
You must be logged in to post a comment.
சரண் அடைந்தவர்களுக்கு பொது மன்னிப்பே சிறந்தது….
போர் குற்ற வாளிகள் சரண் அடைந்தால் அதுவே செய்ய வேண்டும்…