ஜேர்மனி பெர்லின், இலங்கைத் து}தரகம்மீது புலிகளின் ஆதரவாளர்கள் தாக்குதல்
Read Time:1 Minute, 5 Second
ஜேர்மன் பெர்லினில் அமைந்துள்ள இலங்கைத் து}தரகத்தின்மீது புலிகளின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அங்கு வந்த புலி ஆதரவாளர்கள் இரண்டு பெற்றோல் குண்டுகளை வீசியதாகவும், இதில் ஒன்றே வெடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இத்தாக்குதலின்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை யென்கின்ற போதிலும், இது மூன்றுமாத காலப்பகுதிக்குள் மேற்படி து}தரகம்மீது மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதல் என்றும் கூறப்படுகின்றது. ஜேர்மன் பொலீசார் இத்தாக்குதல் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Average Rating