இடம் பெயரும் மக்களுக்கு சமைத்து உதவ 115 முஸ்லிம்கள் வன்னி விரைவு
Read Time:1 Minute, 8 Second
வன்னியில் இடம் பெயர்ந் துள்ள மக்களுக்கு உணவு சமைத்து உதவுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தி லிருந்து 115 முஸ்லிம்கள் நேற்று வன்னிக்கு சென்றனர். அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலியின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி நகரசபை. ஆகியவற்றின் ஏற்பாட்டில் இவர்கள் நேற்று வன்னிக்கு சென்றனர். இரண்டு பஸ் வண்டிகளிலும். ஒரு லொறியிலும் சமையல் பாத்திரங்களுடன் காத்தான்குடிப்பள்ளி வாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கு முன்பாக இருந்து இவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எஸ். எச். அஸ்பர் தலைமையில் இவர்கள் வன்னிக்கு சென்றுள்ளனர்.
Average Rating