புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமெரிக்கா தலைமையிலான டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இணைத்தலைமைகள் சார்பில் அமெரிக்க காங்கிரஸ் செய்மதித் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடன் மூன்றாவது கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளது. பத்து நாட்களுக்குள் இது மூன்றாவது கலந்துரையாடலாக அமைந்துள்ளது. விடுதலைப் புலிகளும் இலங்கை அரசாங்கமும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமெனத் தாம் கோரிக்கை விடுப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் ரொபேர்ட் வூட் தெரிவித்துள்ளார். “விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு மூன்றாவது தரப்பிடம் சரணடைய வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். அதேநேரம்இ விடுதலைப் புலிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவதுடன்இ மீள்குடியேற்றம் தொடர்பான தெளிவான திட்டங்களைத் தயாரித்துக்கொண்டுஇ அரசியல் பேச்சுவார்த்தைக்கான பாதையை இலங்கை அரசாங்கம் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறோம்” என்றார் அவர். மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறியிருப்பதைத் தாம் வரவேற்பதுடன்இ மேலும் சிக்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் இணைத்தலைமை நாடுகள் தமது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளன.
One thought on “புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை”
Leave a Reply
You must be logged in to post a comment.
இத்தனை பெரிய இந்தியா தமிழ் நாட்டில் இலங்கை அகதிகளுக்கு வழங்கிய வசதிகளை விட நூறு மடங்கு மேலான வசதிகளை இலங்கை அரசு இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குகிறது.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லீம் மக்களை ஒரு இரவில் காசு நகை எல்லாம் பறித்து அநாதவராக அவர்களின் பூர்வீக பூமியில் இருந்து பிரபாகரன் கலைத்த போது ஒரு தமிழ் பேசும் இந்துக்களோ அன்றி கிறிஸ்தவரோ ஒரு வார்த்தை பிரபாகரனின் இன சுத்திகரிப்புக்கு எதிராக சொல்லவில்லை.
ஆனால் இன்று அகதிகளான தமிழ் பேசும் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இலங்கை வாழ் முஸ்லீம்கள் உதவி செய்கிறார்கள்.
பிரபாகரனின் தமிழ் ஈழத்தில் பிரபாகரனுக்கு ஆமா போட மட்டும் வாயை திறந்தவர்கள் மக்கள். எங்கு போவது என்றாலும் பிணைவைத்து பாஸ்எடுத்து தான் நடமாடமுடிந்த சுதந்திரத்தைதான் பிரபாகரன் கொடுத்திருந்தான்.
இத்தகைய பிரபாகரனை காப்பாத்த புலன் பெயர்ந்த தமிழர் வீ வோன்ட் தமிழ் ஈழம் அவர் லீடர் பிரபாகரன் என்று தெரு தெருவாக ஊளை இட்டு திரிகிறார்கள்.