பானமை உகந்தைப் பிரதேசத்தில் ஐந்து மீனவர்கள் சுட்டுக்கொலை
Read Time:58 Second
அம்பாறை பொத்துவில் பானமை, உகந்தைக் கோயிலுக்கு அருகிலுள்ள கடலில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த ஐந்து மீனவர்கள் ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளதாக பொத்துவில் பொலீசார் தெரிவித்துள்ளனர். பானமை வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. அத்துடன் அவர்களின் படகுகளும் ஆயுததாரிகளால் எரியூட்டப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் பொத்துவில் பொலீசார் மேற்கொண்ட வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating