அரசாங்கமும் போர்நிறுத்த அறிவிப்பை விடுக்கவேண்டும்: பிரித்தானியா
Read Time:1 Minute, 22 Second
விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த அறிவிப்புக்குப் பதிலாக இலங்கை அரசாங்கமும் போர்நிறுத்த அறிவிப்பை விடுக்க வேண்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தின் மூலம் மோதல்ப் பகுதியிலிருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறமுடியுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் விடுத்துள்ள அறிக்;கையில் குறிப்பிட்டார். மனிதாபிமானக் காரணங்களுக்காகவே போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு தாம் கோருவதாகக் கூறிய டேவிட் மிலிபான்ட், பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானதெனவும் தெரிவித்தார். இரு தரப்பினரும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக செயற்படவேண்டுமென்பதுடன், சகலவேளைகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டுமெனவும் டேவிட் மிலிபான்ட் குறிப்பிட்டார்.
Average Rating