அரசாங்கம் கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லையென்ற உறுதிமொழியை கடைப்பிடிக்கவேண்டும்: ஜோன் ஹோல்ம்ஸ்

Read Time:1 Minute, 32 Second

இலங்கை அரசாங்கம் கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லையென்ற உறுதிமொழியை நடைமுறையில் கடைப்பிடிக்கவேண்டுமென நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் கனரக ஆயுதங்களை பாவிப்பதில்லையென்ற உறுதிமொழியை மதித்து செயற்படுவார்களென தான் நம்புவதாகக் கூறிய ஜோன் ஹோல்ம்ஸ், அரசாங்கம் கூறியதை மதிக்கிறதா என்பது இதில் முக்கியமானதெனவும் குறிப்பிட்டார். இதற்கமைய, மோதல்ப் பகுதியில் என்ன நடைபெறுகிறது என்பதை தாம் அவதானிக்க வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார். இதேவேளை, விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் பயனுடையதாக அமைய வில்லையென்பதுடன், தான் அவர்களுடன் தொடர்பு கொண்ட போது, பொதுமக்களை விடுவிப்பது தொடர்பிலோ அல்லது ஆயுதங்களைக் கீழே வைப்பது தொடர்பிலோ உரிய பதிலளிக்கவில்லையெனவும் ஜோன் ஹோல்ம்ஸ் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரனை நெருங்குகிறது ராணுவம்!!!
Next post தேர்தல் தினத்தில் மாணவரை கொலை சந்தேக நபர் கல்கிஸ்ஸையில் கைது