அரசாங்கம் கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லையென்ற உறுதிமொழியை கடைப்பிடிக்கவேண்டும்: ஜோன் ஹோல்ம்ஸ்
இலங்கை அரசாங்கம் கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லையென்ற உறுதிமொழியை நடைமுறையில் கடைப்பிடிக்கவேண்டுமென நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் கனரக ஆயுதங்களை பாவிப்பதில்லையென்ற உறுதிமொழியை மதித்து செயற்படுவார்களென தான் நம்புவதாகக் கூறிய ஜோன் ஹோல்ம்ஸ், அரசாங்கம் கூறியதை மதிக்கிறதா என்பது இதில் முக்கியமானதெனவும் குறிப்பிட்டார். இதற்கமைய, மோதல்ப் பகுதியில் என்ன நடைபெறுகிறது என்பதை தாம் அவதானிக்க வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார். இதேவேளை, விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் பயனுடையதாக அமைய வில்லையென்பதுடன், தான் அவர்களுடன் தொடர்பு கொண்ட போது, பொதுமக்களை விடுவிப்பது தொடர்பிலோ அல்லது ஆயுதங்களைக் கீழே வைப்பது தொடர்பிலோ உரிய பதிலளிக்கவில்லையெனவும் ஜோன் ஹோல்ம்ஸ் குறிப்பிட்டார்.
Average Rating