போர்நிறுத்தம் இல்லை; அனைத்து மக்களும் விடுவிக்கப்படும் வரை மீட்பு நடவடிக்கை தொடரும்: ஜனாதிபதி

Read Time:2 Minute, 56 Second

animahinda1விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் மக்களில் இறுதியாகவுள்ள ஒருவர் மீட்கப்படும் வரை மீட்பு நடவடிக்கைகள் தொடரும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயத்துக்குள் இன்னமும் விடுதலைப் புலிகள் இருப்பதாக புலனாய்வுத் தவவல்கள் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்கள் சரணடைவதற்கு அழைப்பு விடுத்துள்ள போதும் எவரும் இதுவரை சரணடையவில்லையெனக் கூறினார். “பணயக் கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மக்களில் இறுதியாகவுள்ள ஒருவர் விடுவிக்கப்படும்வரை மீட்பு நடவடிக்கை தொடரும். விடுதலைப் புலிகளின் தலைவரைப் பற்றியோ வேறு எவரைப் பற்றியோ நாம் கவலைப்படப்போவதில்லை” என சி.என்.என்.-ஐ.பி.என். தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார். அதேநேரம், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபகாரன் உயிருடன் கைது செய்யப்பட்டால் முதலில் அவர் இலங்கைச் சட்டத்துக்கு அமைய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் ஜனாதிபதி கூறினார். அதன் பின்னர் எவர் வேண்டுமாயினும் அவரை அழைத்துச் செல்லலாம் என ஜனாதிபதி குறிப்பிட்டார். “இதனைச் செய்வதற்கு இந்தியாவுக்கு உரிமை உள்ளது என நான் நினைக்கிறேன். ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பில் பிரபாகரன் தேடப்பட்டு வருகிறார். பிரபாகரன் தொடர்பில் எந்தவொரு நாட்டு அரசாங்கமும் எம்முடன் வந்து கலந்துரையாடி முடிவொன்றுக்கு வரலாம். எதுதான் எனது தனிப்பட்ட நிலைப்பாடு” என ஜனாதிபதி தனது செவ்வியில் கூறினார். போர்நிறுத்தம் இல்லை இதேவேளை, பயணக்கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவிக்க வேண்டியது தனது கடமையெனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் எனக் கூறினார். எனினும், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அவர்கள் தாக்குதல்களை நடத்த மாட்டர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “போர்நிறுத்தம் இல்லை; அனைத்து மக்களும் விடுவிக்கப்படும் வரை மீட்பு நடவடிக்கை தொடரும்: ஜனாதிபதி

  1. முன் வைத்த காலை பின் வைக்க கூடாது……
    என்னவாவது செய்து இந்த புலிகளின் விளையாட்டை நிறுத்த வேண்டும்…..

    இந்த நாகரீக உலகில்…அடக்கு முறையாம்…இனத்துவேசமாம்… சும்மா புலுடா விட்டு கொண்டு தாங்கள் திண்டு கொளுத்து தான் மிச்சம்…..

Leave a Reply

Previous post ஜோன் ஹோல்ம்ஸ் வவுனியாவுக்கு சென்றுள்ளார்
Next post உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும்: ஜோன் ஹோல்ம்ஸ்