பிரபாகரனை நெருங்குகிறது ராணுவம்!!!

Read Time:2 Minute, 50 Second

ltteprabha-hanging1முல்லைத் தீவில் பெரும்பகுதியை பிடித்து விட்டதாக அறிவித்துள்ள இலங்கை ராணுவம், பிரபாகரன் மறைந்துள்ள பகுதியையும் மிகவும் நெருங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் வசம் இருந்த வளையார் மடத்தையும் பிடித்து விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது. தற்போது 6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டுவிட்டனர். இந்தப் பகுதியில்தான் பிரபாகரன் மறைந்திருப்பதாக நம்பப்படுகிறது. வளையார் மடம் பகுதியில் சிக்கியிருந்த அப்பாவி மக்கள் 500 பேரை மீட்டு பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்பி வைத்ததாகவும் ராணுவம் தெரிவித்தது. வளையார் மடம் பிடிபட்டதை அடுத்து விடுதலைப் புலிகள் வசம் இன்னும் எஞ்சியிருப்பது வெல்லமுள்ளிவாய்க்கால் பகுதி மட்டுமே. இதற்கிடையே 23 விடுதலைப் புலிகள் ராணுவத்திடம் சரணடைந்ததாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நானயக்காரா தெரிவித்தார். இது ஆரம்பம்தான் இன்னும் அதிகமான விடுதலைப் புலிகள் சரணடைவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர். இன்னும் விடுதலைப் புலிகள் 700 பேர் உள்ளனர். இவர்களில் பலர் இயக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் என்றும் அவர் கூறினார். இதற்கிடையே இலங்கை கடற்படை விடுதலைப் புலிகளின் மூன்று படகுகளை மூழ்கடித்தனர். இதில் 12 புலிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளிடம் எஞ்சியுள்ள பகுதியில் 50 ஆயிரம் அப்பாவி மக்கள் இருப்பார்கள் என்று ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. ஆனால் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் இருப்பார்கள் என்று இலங்கை அரசு மதிப்பிட்டுள்ளது. பிரபாகரன் உள்பட விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களைப் பாதுகாக்கும் சிறப்பு அதிரடிப் படை வீரர்களிடையே சோர்வும் நம்பிக்கையின்மையும் ஏற்பட்டுள்ளது என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

7 thoughts on “பிரபாகரனை நெருங்குகிறது ராணுவம்!!!

  1. இவரின் சகோதர படுகொலைக்கு, இவர் பதில் சொல்லும் காலம் வந்து விட்டது….

    தாமே தமிழரின் ஏகபிரதிநிதி எண்டு சொல்லி எத்தனை சக இயக்க போராளிகளை கொன்று குவித்தாங்கள்.. கேவலம்….கேவலம்….

    இப்ப மகிந்தவிடம் பிச்சை கேக்கினம்….அதிலையும் பந்தா இன்னும் குறையல….

  2. தமிழரின் ஏக பிரதினிதி தலைவர் பிரபாகரன். அவரை நெருங்க எவராலும் இயலாது. தமிழீழம் வெல்வது நிச்சயம். இதனை தடுக்க சிங்கள ராணுவத்தாலும் தமிழ் ஒட்டு குழுக்களாலும் இயலாது.

  3. THAMIL AADKAL ELLAAM KAASU KUDUTHTHAAVATHU VP I JATHAARTHAVAATHIJIDAM IRUNTHU KAAPPATTA MUDIJAATHAAAAA?

  4. தமிழரின் ஏக பிரதினிதி தலைவர் பிரபாகரன். அவரை நெருங்க எவராலும் இயலாது…it’s a realty true comment…nobody can reach Hon.Piraba…this is 100%.

  5. அஞ்சா நெஞ்சன் எங்கே இருக்கின்றீர்கள்? புலம்பெயர் நாட்டிலே தானே?
    அப்ப ரொம்ப சரி…. நீங்கள் வீர வசனம் பேசலாம்

  6. நக்கீரன் அவர்களே !
    உங்கள் விமர்சனங்கள் கருத்துக்கள் மிகவும் அருமையானவை.
    புலன் பெயர்ந்த புத்தி பேதலித்த புக்கா விளக்கெண்ணைகளுக்கு உங்கள் எழுத்துக்கள் விளங்கவே விளங்காது. ஊளை இடும் இந்த நரிகளை மாற்ற முடியாது.
    இந்த முழு முட்டாள்களுக்கு பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.
    மனிதம் உள்ள மனிதர் அனைவரும் உங்களையும் உங்கள் கருத்துக்களையும் நேசிக்கிறார்கள்.

Leave a Reply

Previous post தமிழ்ப் பகுதிகளுக்கு தங்களால் செல்ல முடியாதுள்ளது: இரா.சம்பந்தன்
Next post அரசாங்கம் கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லையென்ற உறுதிமொழியை கடைப்பிடிக்கவேண்டும்: ஜோன் ஹோல்ம்ஸ்