பிரபாகரன் கிழக்கு பகுதிக்கு தப்பினார்???

Read Time:2 Minute, 42 Second

lttepiraba-008வன்னி போர் முனையிலிருந்து பிரபாகரனும், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் சிலரும் தப்பிச் சென்றுவிட்டதாக விடுதலைப்புலி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அங்கு இருப்பதாகவும் இலங்கை ராணுவ அதிகாரிகள் கூறி வந்தனர். நீர்மூழ்கி கப்பல் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல பிரபா கரன் திட்டமிட்டிருந்ததாக ராணுவத் திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர் தயா மாஸ்டர், மொழி பெயர்ப்பாளர் ஜார்ஜ் ஆகியோர் தெரிவித்ததாக ராணுவம் கூறியது. இலங்கை ராணுவ தளபதி சரத்பொன்சேஹாவும் இதே கருத்தை தெரிவித்திருந்தார். ஆனால் போர்ப் பகுதியிலிருந்து பிரபாகரனும், முக்கிய தளபதிகள் மற்றும் வீரர்கள் தப்பிச் சென்று விட்டதாக விடுதலைப் புலிகளின் வட்டாரங் களை மேற்கோள் காட்டி தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர்ப் பகுதியில் பிரபாகரன் தற்போது இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர் கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள யாலா காட்டுப்பகுதிக்கு சென்று விட்டிருக் கலாம் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டது. இந்த செய்தி இலங்கை ராணுவத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. கிழக்கு மாகாணம் ஏற்கனவே புலிகளின் கட்டுப் பாட்டிலிருந்து ராணுவத்தின் கைக்கு போய் விட்ட நிலையில் அங்கு கொரில்லா முறை யில் புலிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. யாலா காட்டுப்பகுதியில் அண்மையில் பெரும் தாக்குதல் நடந்தது நினைவிருக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

7 thoughts on “பிரபாகரன் கிழக்கு பகுதிக்கு தப்பினார்???

  1. போச்சடா போ தப்பீட்டானா இனி எப்ப காசுகேக்க வரப்போரானோ. நான் நெனச்சன் இத்தோட செத்தான் என்று. இவனுக்கு ஆயுள் கெட்டி போல இருக்கு.

  2. He was seen riding in an elephant in Jaela forests. Now the army can stop killing people.

  3. அவன் தப்பினா என்ன செத்தா என்ன…
    மக்கள் தப்பினா சரி தான்..

    இந்த புலி நாய்கள் போராட்டம் எண்டு தொடங்கி எவ்வளவு இழப்பு…
    இப்ப என்ன செயினம்..சேலைக்கே மயிர் புடுங்கினமே?

    ஏலாட்டி எங்காவது ஓடிவிட வேண்டும்…மக்கள் இழப்பாவது குறையும்..

  4. தமிழின துரோகிகள் உங்களை போல புலிகள் ஒன்ற்றும் கோழை அல்ல. இந்தியாவின் சிங்களவனின் போடும் ஏலும்பு பொருக்கிகள் திருந்தவே மாட்டீங்களா?

    சூரியன் இல்லாட்டி மட்டும் நீங்க காசு குடுத்திட்டாலும்.
    மாசா மாசாம் பீர் அடிக்கிற காசில கொஞ்சமாவது நாட்டுக்கு குடுக்கிறீங்களா? பேச்சுகு மட்டும் குறைவு இல்ல

  5. நாங்க நாட்டுக்கு குடுக்கவிலையா? ஹிஹி….
    சரி நாங்க பீர் அடிக்கிறோம்… உங்க தலைவரும் தளபதிகளும் ஊரான் காசில தின்னு வண்டியும் குண்டியும் வீங்கி நடக்க கூட முடியாமல் இருக்கினம்…
    எங்க தமிழ் ஈழம் பிடித்து தருவது?

    மானம் கெட்டவர்களே…இந்திய ராணுவத்தை துரத்த உங்கள் தலைவர் சிங்களவனுடன் சேரவில்லையா…. அவன் போட்ட எலும்பு துண்டை சூப்பவில்லையா?

    நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை கிடைக்கும்.. நடக்க கூட முடியாமல் உடம்பு பெருத்த உங்கள் புலி தளபதிகள்.. உங்களுக்கு தமிழ் ஈழம் வாங்கி தருவினம்… அப்போ வன்னியில் ஒரு தமிழரும் உயிரோடு இருக்க மாட்டினம்… நீங்கள் புலம் பெயர் தமிழர் லீவுக்கு போய் உல்லாசம் அனுபவியுங்கோ…

  6. neenga enna nianakiringa
    tamilan srilangava uluthu , thozil nutpam , electrial ,electaranics, engineering,ellathayum uruvakuvan anubavikka koodatha enda ethana periyar vanthalum ungala pola sooriyan,nakeeran ungala thirutha matinga
    amerikavula pona sama oorimai erukku
    anan tamilan ooruvakkuna srilangavla illa enna da koduma
    thiruthunga da

  7. ஐயா நல்லவன்….

    பெரியார் வந்து நம்மை திருத்தனுமா? இல்லை உங்களையா?
    பெரியார் கொள்கைகளை தெரிந்து தான் கதைக்கிரீரா?

    பெரியார் எப்பவும் சுய சிந்தனை , எதையும் தான் நினைப்பதையே செய்பவர்…
    சும்மா தலைவர் செய்ததா சரி எண்டு தலை ஆட்டுபவர் இல்லை…

    சும்மா படத்தில விவேக் ” எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாது” எண்டு சொல்வதை கேட்டு விட்டு கதைக்க வேண்டாம்….

    நான் எப்பவும் பெரியாரின் பாதை தான்…..

Leave a Reply

Previous post லண்டனில் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்: 5 தமிழர்கள் கைது
Next post தமிழ்ப் பகுதிகளுக்கு தங்களால் செல்ல முடியாதுள்ளது: இரா.சம்பந்தன்