தேர்தல் தினத்தில் மாணவரை கொலை சந்தேக நபர் கல்கிஸ்ஸையில் கைது

Read Time:1 Minute, 40 Second

இரத்மலான படோவிட்ட பகுதியில் தேர்தல் தினத்தன்று பாடசாலை மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கல்கிஸ்ஸை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல்மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்ற கடந்த சனிக்கிழமை ஒரே கட்சியை சேர்ந்த ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சமில புஷ்பகுமார (வயது18) என்ற இளைஞர் கொல்லப்பட்டார். கல்விப் பொதுத்தராதர உயர்தரம் பயின்று வரும் இவர் வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்வதைப் பார்ப்பதற்காக வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து பார்த்த போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். இதுதொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கியுடன் கல்கிஸ்ஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி மேலும் சிலரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசாங்கம் கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லையென்ற உறுதிமொழியை கடைப்பிடிக்கவேண்டும்: ஜோன் ஹோல்ம்ஸ்
Next post இலங்கைக்கான தூதுவரை மீள அழைக்கிறது சுவீடன்