தயாமாஸ்டர் ஜோர்மாஸ்டரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை
Read Time:1 Minute, 5 Second
இராணுவத்தினரிடம் சரணடைந்த புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்டர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர் ஜோர்ஜ் ஆகியோர் மேலதிக விசாரணைக்காக இரகசிய பொலிஸாரிடம் கையளிக்கப் பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து வவுனியா சென்ற விஷேடபொலிஸ் குழுவினர் அவர்களை பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்து வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் முக்கியஸ்தர்களாக விளங்கிய இவ்விருவரிடமும் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களான தயாமாஸ்டர் ஜோர்ஜ்மாஸ்டர் ஆகியோர் கடந்த வாரம் இராணுவத்தினரிடம் சரணடைந்தமை குறிப்பிடதக்கது.
Average Rating