இலங்கை நிலவரம் குறித்து சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் ஒபாமா
Read Time:1 Minute, 16 Second
இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் பல்வேறு துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அரசின் பல்வேறு துறைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார் இந்த ஆலோசனையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பென்டகன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் யு எஸ் எயிட் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இலங்கை விவகாரத்தை அமெரிக்க அரசு தீவிரமாக கருதுவதையே இந்த அவசர கூட்டம் எடுத்துக்காட்டுவதாக வெள்ளைமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கிறது அதிபர் ஒபாமா இலங்கை நிலவரம் குறித்து தினசரி அவதானித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating