184 வாக்குகள் மட்டுமே பதிவான வாக்களிப்பு நிலையம்..
Read Time:1 Minute, 7 Second
களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை தொகுதியில் அத்தலே பகுதியில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் 184வாக்குகள் மட்டுமே பதியப்பட்டுள்ளதாக வாலிதுநுவர பிரதேச செயலாளர் அனோஜா கமகே தெரிவித்துள்ளார் இப்பகுதியிலுள்ள வீதியொன்றைத் திருத்திதஇ தரக்கோரியே இப்பகுதியில் மக்கள் வாக்களிப்பதிலிருந்து விலகிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. பதுரலிய பெலவத்தை வீதி மக்கள் பாவனைக்கு உட்படுத்த முடியாதளவுக்கு சேதமடைந்துள்ள போதும் அதனை புனரமைத்துக் கொடுக்க எவரும் முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனாலேயே தாம் வாக்களிப்பிலிருந்து விலகிக் கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Average Rating