இந்தஆண்டு முடிவடைவதற்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் -ஊடக அமைச்சர்
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு முடிவதற்குள் நடாத்த தீர்மானித்துள்ளதாகவும் அதாவது எதிர்வரும் நவம்பர் மாதம் 19ம் திகதிக்கு பின்னர் நடைபெறுமெனவும் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த ஜனாதிபதி தேர்தலில் முடியுமானால் ஜெயித்து காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஊடக அமைச்சர் சவால் விடுததுள்ளார் பகுதியளவில் தேர்தல்களை நடாத்த வேண்டாம் என ஜக்கிய தேசியக் கட்சியின் பொதுச்; ;சேயளாளர் விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார் அரசாங்க தகவல் திணைக்களத்தின் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தரிப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனணக் குறிப்பிட்டார் இதேவேளை அரசாங்கம் மேல் மாகணசபை தேர்தலில் வெற்றியீட்டியதை தொடர்ந்து தென்னிலங்கையில் மீதியாகவுள்ள ஊவா மற்றும் தென் மாகணசபைகளை கலைத்து தேர்தல் நடர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் குறித்த இரு மாகாணசபைகளையும் கலைக்கவுள்ளதாகவும்’ தகவல்கள் தெரிவிக்கின்றன
Average Rating