மட்டக்களப்பில் பாடசாலை மாணவி ஒருவரைக் காணவில்லை
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபல ஆரம்ப பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் நேற்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார் மட்டக்களப்பு பூம்புகரையைச் சேர்ந்த சந்திஷ்குமார் வினுஷிகா (வயது 08) என்ற மாணவியே இவ்வாறு காணமல் போயுள்ளார் கோட்டைமுனை கனிஷ்ட பாடசாலையில்; இம் மாணவி கல்வி பயின்று வந்துள்ளவராவர் நேற்றுக் காலை அம்மாணவியின் பாட்டனார் வழமை போல் அவரை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்து சென்றுவிட்டு வந்துள்ளார். பாடசாலை விடும் வேளையில் அவரை அழைத்துச் செல்ல அவரது பாட்டனார் சென்ற போது அம் மாணவி மர்மமான முறையில் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது இச்சம்பவத்தினால் அப்பாடசாலை மாணவர்களிடையே பதற்றமான சு10ழ்நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது இம் மாணவியின் தந்தையான சதிஷ் குமார் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது வீட்டிற்கு வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating