திருகோணமலையில் தேடுதல் நடவடிக்கை 15 தமிழர்கள் கைது
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தமிழ் கிராமங்களில் நேற்று இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து கடுமையான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதில் 15 தமிழ்இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர் திருகோணமலையில் உள்ள சாம்பல்தீவு நிலாவெளி செல்வநாயகபுரம் மற்றும் கன்னியா ஆகிய பகுதிகளிலேயே நேற்ற தேடுதல் நடவடிக்கை படையினரால் மேற்கொள்ளப்பட்டது திருகோணமலை நகருக்குள் விடுதலைப்புலிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 15 தமிழர்களுடன் கூடுதலான இளைஞர்கள் இப்பிரதேசங்களில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல்துறை நிலையங்களில் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது திருப்திகரமான பதில் ஏதும் கிடைக்காததால் அவர்களை காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளையில் திருமலை நகரப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு மேலதிக காவல்துறையினரும் படையினரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். வீதிகளில் பாதசாரிகள் சைக்கிளில் செல்வோர்கள் மீதான விசாரணைகளும் அதிகரிக்கப் பட்டுள்ளன என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating