டெங்குநோய் பரவியதால் தங்காலை பாடசாலைகள் மூடப்பட்டன..
Read Time:1 Minute, 14 Second
தங்காலையில் டெங்குநோய் பரவிவருவதன் காரணமாக அப்பகுதியிலுள்ள பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது தங்காலை கல்விவலயத்திற்கு உட்பட்ட எட்டுப் பாடசாலைகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளதோடு அப்பாடசாலைகள் எதிர்வரும் 3ம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இப்பகுதியில் டெங்குநோய் தீவிரமாக பரவி வருவதனால் பாடசாலை மாணவர்கள் ஐந்துபேர் ஒரே வாரத்தில் உயிரிழந்துள்ளனர் மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது பாடசாலை மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் டெங்குநோயை பரப்பும் நுளம்புகளை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating