பெண்களை ஏமாற்றிய போலிக்காதலன் கைது

Read Time:1 Minute, 24 Second

வர்த்தகரென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு பெண்களை ஏமாற்றி நகை, பணம் போன்றவற்றை சூறையாடி வந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரத்தைச் சேர்ந்த இவர் காரில் திரிந்து பல பெண்களை காதல்வலையில் சிக்க வைத்துள்ளார் என பொலிஸ் விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது. தன்னுடன் காதல் வயப்படும் பெண்களை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் நகைகளை சூறையாடி செல்வதை இவர் வழமையாக கொண்டுள்ளார் என பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வருகிறது. இவர் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பெண் பொலிஸ் ஒருவரை காதலியாக நடிக்க வைத்து இவரை கைது செய்ததாக வெயாங்கொடை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இடம்பெயர்ந்து வந்த பெருந்தொகையான அப்பாவிப் பொதுமக்கள் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறுகின்றனர்- செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு
Next post டெங்குநோய் பரவியதால் தங்காலை பாடசாலைகள் மூடப்பட்டன..