புலிகளின் மரபு ரீதியிலான இராணுவ பலம் குன்றினாலும் போராட்ட வல்லமையை குறைத்து மதிப்பிட முடியாது -ஹிமாலயன் டைம்ஸ்
தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபு ரீதியிலான இராணுவ பலம் குன்றியிருந்த போதிலும் போராட்ட வல்லமையை குறைத்து மதிப்பிட முடியாதென ஹிமாலயன் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளை வலயமைப்பில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் இதனால் இன்னமும் மிகவும் வலுவான நிலையில் காணப்படுவதாகவும் அந்த பத்;திரிகை குறிப்பிட்டுள்ளது இந்தியா மற்றும் இலங்கையில் தற்கொலைத் தாக்குதல்கள் நடாத்தப்படக் கூடுமென எதிர்வு கூறியுள்ளது எனவே தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்ற மதிப்பீடு நடைமுறைச் சாத்தியப்பாடற்றதென தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக மரபு ரீதியான ஆயுத போரட்டத்தில் புலிகள் தோல்வியைத் தழுவினாலும் வேறு வழிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படக் கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ளது.
One thought on “புலிகளின் மரபு ரீதியிலான இராணுவ பலம் குன்றினாலும் போராட்ட வல்லமையை குறைத்து மதிப்பிட முடியாது -ஹிமாலயன் டைம்ஸ்”
Leave a Reply
You must be logged in to post a comment.
ஆமா.. ரொம்ப சரி..ஹிஹி ஒரு முப்பது வருடம் பின் நோக்கி போய் விட்டோம்…
இன்னும் எத்தனை மனித கொலைகளோ? தேவையா இது?
ஒரு மனங்கட்டியும் வேண்டாம்.. மக்கள் நிம்மதியாக இருந்தாலே போதும்…
இந்த போராட்டம் எண்டு தொடங்குபவர்களை அழிக்க வேண்டும்…
இனிமேலும் ஒரு ஆயுத போராட்டம் வேண்டாம்….ப்ளீஸ்…