தடுப்பு முகாம்களில் இருந்து இளைஞர்கள் தப்பியோட்டம் மன்னிப்பு வழங்குவதாக அறிவித்தும் ஒருவரும் சரணடையவில்லை
யாழ்பாணம் நெல்லியடி மத்திய மஹாவித்தியாலய தடுப்பு முகாமில் இருந்து பல இளைஞர்கள் தப்பி சென்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இருதினங்களில் தடுப்பு முகாம்களில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் தப்பிச் சென்றவர்களை சரணடையுமாறு அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவும் ஒலிபெருக்கிகள் ஊடாக இராணுவத்தினர் தென்மராட்சிப் பகுதிகளில் பிரசாரித்து வருவதாக யாழ்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முகாமில் உள்ள இளைஞர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட காரணமாகவே இந்த இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது வவுனியா தடுப்பு முகாமிலும் இதே நிலையே காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறன அச்சம் காரணமாக வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்தும் அதிகஅளவிலான இளைஞர்கள் தப்பி சென்றுள்ளனர். இதேவேளை இந்த முகாம்களில் எஞ்சியுள்ள இளைஞர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த எண்ணியுள்ளதாக இராணுவ புலனாய்வுதுறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating