ஐ.நா.வினால் வெளியிடப்பட்ட செய்மதிப்படங்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரிப்பு
வன்னியில் பொதுமக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயத்தின் மீதான தாக்குதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினால் வெளியிடப்பட்ட செய்மதிப்படங்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சு இன்று நிராகரித்துள்ளது இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட இ;ப்படங்கள் வெளிநாட்டு தொலைகாட்சிகள் பலவற்றிலும் ஒளிபரப்பப்பட்டன ஷெல் தாக்குதல்களினால் ஏற்பட்ட குழிகளை அப்படங்கள் வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப் பட்டிருந்தது ஆனால் தரையி;ல் இதுதொடர்பில் உறுதிப்படுத்தல்கள் கிடைக்கப் பெறும் வரை இப்புகைப்படங்கள் விஞ்ஞான ரீதியாக செல்லுபடியாகத் தக்கதல்ல என பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது எனினும் இப்படங்கள் குறித்து நேரங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது தேவையான எவரும் அதை ஒப்பீடு செய்து கொள்ளலாம் என வரைபட பிரிவுத் தலைவர் ஈனேர் ஜோர் அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்தார். இதேவேளை பாதுகாப்பு வலயததில் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பாக செய்மதி ஊடாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டமை தொடர்பாக இலங்கையிலுள்ள ஐ.நா இணைப்பதிகாரி நெய்ல் புனேயிடம் இலங்கை அரசாங்கம் விளக்கம் கோரியுள்ளது.
Average Rating