கல்முனைப் பிரதேசத்திலுள்ள கடற்கரைப்பள்ளி பகுதியில் வெடிப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
Read Time:1 Minute, 11 Second
கல்முனைப் பிரதேசத்திலுள்ள கடற்பள்ளிப்ப பகுதியில் இன்று காலை மறைவிடமொன்றில் இருந்து ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றின்பேரில் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது சிறிய ரக பிஸ்டல் 01 அதற்கான ரவைகள் 60 கைகுண்டுகள் 02 ஆகியன கண்டுபிடிக்கப்பட்டள்ளது என தெரிவிக்கப்படுகிறது மட்டக்களப்பு நகருக்கு வெளியே புதுநகர்பகுதியில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலொன்றின்பேரில் கிணற்றொன்றிலிருந்து 81 எம்.எம். மோட்டார் குண்டுகள் 16 கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
Average Rating