பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசாங்கத்திடம் திட்டம் இல்லை
Read Time:1 Minute, 11 Second
இலங்கையில் பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க முறையான திட்டங்கள் கையாளப்படுவதில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது அச்சங்கத்தின் செயலாளர் உபுல் குணசேகர இதுபற்றி கூறியதாவது பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கு முறையான நடைமுறை கையாளப்படுவதில்லை குறிப்பாக பன்றிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் ஸ்கேனர் செயற்படவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது அத்தோடு எவரேனும் பன்றிக்காய்சலால் பீடிக்கப்படுவார்களாயின் அவர்களுக்கு வழங்குவதற்கு போதுமானளவு மருந்துகள் இல்லை எனவே இதற்கு சரியான நடைமுறை கையாளப்படவேண்டும் இல்லையெனில் பன்றிக்காய்ச்சல் வெகு சுலபமாக பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
Average Rating