வாழைச்சேனையில் யுவதியின் சடலம் குழியிலிருந்து மீட்பு

Read Time:2 Minute, 18 Second

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கண்ணகிபுரம் விளையாட்டு மைதானம் அருகில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த வாகரையைச்சேர்ந்த யுவதியின் சடலம் நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இவ்வாறு கொல்லப்பட்டவர் 24வயதுடைய ஆறுமுகம் வனஜா என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் வாழைச்சேனை பதில் நீதிபதி எம்.பி.எம். உசைன்முன்னிலையில் நேற்று பகல் மீட்கப்பட்டுள்ளது மரண விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் பரிசோதனைக்கு உத்தரவிட்டார் வாழைச்சேனை வைத்தியசாலை வைத்தியர் எஸ்.ஏ.அஜிமுஸ்கீன் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டார் கடந்த மாதம் 24ம் திகதி நேர்முகப்பரீட்சை ஒன்றுக்கு வாகரையிலிருந்து சென்றிருந்த இந்த யுவதி பின்னர் வீடுதிரும்பவில்லை என உறவினர்களால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். பின்னர் இந்த யுவதியை அழைத்துச்சென்றவர் என்ற சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார் இவர் வழங்கிய தகவலையடுத்தே தேடுதல்கள் நடத்தப்பட்டனவாழைச்சேனை ஆறு உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டபோதும் நேற்றைய தினம் சடலம் குழி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது கைதுசெய்யப்பட்ட நபருக்கும் யுவதிக்குமிடையில் நீண்டகாலமாக தொடர்பிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது இந்த கொலைச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனைப்பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசாங்கத்திடம் திட்டம் இல்லை
Next post தமிழ் மக்களுக்கு சிறந்த சேவை செய்கின்றதென்று வெள்ளையடிக்க வேண்டாம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு