முதியவர்களை பாடசாலையில் வைத்து பராமரிக்கும் கோயில்குளம் சிவன்கோயில் நிர்வாகம்..
வவுனியா உமாமகேஸ்வரன்வீதி சமளங்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள வயோதிபர்களை கோயில்குளம், சிவன்கோவில் நிர்வாகத்தின் பராமரித்து வருகின்றனர். மோதல்களினால் இடம்பெயர்ந்து இந்த பாடசாலையில் தங்கியிருந்த 71வயோதிபர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று சுகமடைந்த நிலையிலேயே கோவில் நிர்வாகத்தினர் அவர்களைப் பராமரித்து வருகின்றனர். உறவினர்கள், நண்பர்களினால் இனங்காணப்படாதவர்களையே சிவன்கோயில் நிர்வாகத்தினர் பாடசாலையில் வைத்து பராமரிப்பதாக வவுனியா மாவட்ட அரசஅதிபர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுமார் 1700முதியவர்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய முதியவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பெரும்பாலும் இவ்வாரத்திற்குள் எஞ்சிய முதியவர்கள் அனைவரையும் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்
Average Rating