மட்டக்களப்பில் உரிமையாளர் அல்லாதோர் மோட்டார் சைக்கிள்களில் செல்லத் தடை
Read Time:1 Minute, 22 Second
மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள மயிலம்பாவெளி பொலீஸ் இராணுவ கூட்டுப்பணி சோதனைச் சாவடியின் ஊடாக உரிமையாளர் அல்லாதோர் மோட்டார் சைக்கிள்களில் பிரயாணம் செய்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் உறவினர்களின் மோட்டார் சைக்கிள்களில் மட்டக்களப்பு நகருக்குள் நுழைவதில் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கப்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். வாழைச்சேனை, ஓட்டமாவடி, செங்கலடி, ஏறாவூர் மற்றும் வாகரை ஆகிய பிரதேசங்களிலிருந்து அலுவலக வேலைகள் மற்றும் பல்வேறு வேலைகளின் நிமித்தம் குறித்த சோதனைச் சாவடியின் ஊடாக நகருக்குள் நுழைவதில் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி உரிய தரப்பினரிடமும் படை அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ள போதிலும் நடவடிக்கைள் எடுக்கப்பட வில்லையெனவும் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
Average Rating