ஆதிவாசிகளின் தலைவருக்கு கொலை அச்சுறுத்தல்..
Read Time:1 Minute, 13 Second
ஆதிவாசிகளின் தலைவர் ஊருவிலகே வன்னியலோ எத்தோவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மஹியங்கனை காட்டுக்குள் மரத்தை வெட்டும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுவருபவர்களே இவ்வாறு தனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார் காடுகள் அழிக்கப்பட்டு வருவதற்கு தமது இனத்தவர்கள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர். எனவும் காடுகள் அழிக்கப்படுவதானது தமது அடிப்படை உரிமை மீறல் எனவும் அவர் கூறியுள்ளார். ஆதிவாசிகளின் உயிரைப்பாதுகாப்பதற்காக தனது உயிரையும் கொடுக்க தயாராக இருப்பதாக வன்னியலோ எத்தோ தெரிவித்துள்ளார். ஆதிவாசிகளின் தலைவரின் முறைப்பாடு தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் விசாரணைகயை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating