புலிகளின் பயிற்சி முகாமிலிருந்து தப்பிய சிறுவர்கள் இராணுவ முகாமில் தஞ்சம
Read Time:1 Minute, 4 Second
புலிகளால் பலவந்தமாக கட்டாயப் பயிற்சிக்காக கடத்திச் செல்லப்பட்ட மூன்று பாடசாலை மாணவர்கள் நேற்றுமாலை புலிகளிடம் இருந்து தப்பி வந்து மூது}ரிலுள்ள இராணுவ முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த இருதயா அமலதாஸ்சங்கர் (வயது 19), ஜோர்ஜ் கெனி (வயது 17) மற்றும் தியகராஜா குணராஜா (வயது 20) ஆகிய பாடசாலை மாணவர்களே தற்போது இராணுவ முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதேவேளை புலிகளின் கிளிவெட்டி தடுப்பு முகாம்களில் 14,15,16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களை தடுத்து வைத்து பலவந்தப்படுத்தி கட்டாய ஆயுதப் பயிற்சிகளை புலிகள் வழங்கி வருவதாகவும் இராணுவ முகாமில் தஞ்சமடைந்த சிறுவர்கள் தெரிவிக்கின்றனர்.