மட்டு வவுணதீவில் ஆசிரியர் ஒருவர் சுட்டுக்கொலை

Read Time:1 Minute, 39 Second

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் காயான்மடு பிள்ளையார் கோயிலடியில் வைத்து ஆசிரியர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இத்துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர் பாவற்கொடிசேனை விநாயகத்தில் கடைமையாற்றும் 32வயதான பாலசிங்கம் ரவீந்திரராஜா என்ற ஆசிரியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆசிரியர் மங்கிகட்டு கிராமத்திலுள்ள தனது வீட்டிலிருந்து இன்றுகாலையில் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிராக மோட்டார்சைக்கிளில் தலைக்கவசம் அணிந்த நிலையில் பயணித்த ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டிலேயே பலியானார் இச்சூட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் இத்துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களோ சம்பவத்திற்கான பின்னணியோ தமது ஆரம்பகட்ட விசாரணைகளின் போது இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரனை காப்பாற்ற வெளிநாடுகள் முயற்சி -பிரதமர் தெரிவிப்பு
Next post முல்லைத்தீவு இடம்பெயர் மக்களது குறைகளை நீக்க தமிழ்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட விஷேட குழு..