அமைச்சர் டக்ளஸை கொலை செய்ய இரண்டு கோடி ரூபா பேரம்: ரூபா 10 இலட்சம் முற்பணமும் ஆயுதங்களும் புலிகளினால் கையளிப்பு
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்யும் சதித் திட்டமொன்று அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்தப் படுகொலைச் சதித் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட ஏழு பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் விமானப் படை வீரர் ஒருவரும் உள்ளடங்குகிறார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கொலை செய்யும் பிரதான பொறுப்பு இந்த விமானப் படை வீரரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.. இதற்காக இரண்டு கோடி ரூபாவை வழங்குவதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இணக்கம் தெரிவித்திருந்ததுடன் இந்தத் தொகையில் 10 இலட்சம் ரூபாவையையும் கொலைக்குப் பயன்படுத்துவதற்கான ஆயுதங்களையும் புலிகளிடமிருந்த இந்த முன்னாள் படை வீரர் பெற்றுக் கொண்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
Average Rating