அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதானால் அரச சார்பற்ற நிறுவனங்கள் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ அனுமதி
அரசங்கத்தின் வரைமுறை கட்டுப்பாடுகளுக்கு அமைய அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயல்படுமானால் அவற்றுக்கான பூரண ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் அரசாங்கத்தின் வரையறைகளுக்கும் கட்டுப்பாட்டுக்கும் அமைய தொழில்படும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கு இலங்கையில் தொழில்படுவதற்கான உரிமைகளை வழங்க இந்தக் கருத்தினை வெளியிட்டார் அலரி மாளிகையில் ஜனாதிபதிக்கும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிகளுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் போது கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இந்தக் கருத்தினை வெளியிட்டார் இந்தச் சந்திப்பின் போது வடக்கு மக்களிற்கான மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதனால் அரச சார்பற்ற அமைப்புக்கள் முகம் கொடுக்க வேண்டிய பிரச்சனைகளைக் குறித்தும் அந்த மக்களின் வாழ்கைத்தரத்தை மேம்படுத்தும் வழி முறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating