கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் பலி எண்மர்காயம்
Read Time:1 Minute, 10 Second
கொழும்பு மாளிகாவத்தை ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள ஜூம்ஆ மஸ்ஜித் வீதியில்இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 8பேர் காயமடைந்துள்ளனர் ஜூம்ஆ தொழுகையின்பின்னர் அந்த பிரதேசத்திற்கு வந்த மூகமூடி தரித்த ஆயுததாரிகளினாலேயே இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் தற்போதும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் பாதாள உலககோஷ்டிகளுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைகாரணமாகவே இந்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Average Rating