தொப்பிகலை பிரதேசத்தில் புத்தர் சிலை: வெசா தினமன்று புதிதாக பிரதிஷ்டை..
மட்டக்களப்பு தொப்பிகலை பிரதேசத்தில் புத்தர் சிலையொன்று வெசாக் பௌர்ணமி தினமன்று புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இப்பிரதேசம் தற்போது இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.இப்பிரதேசத்தில் அமைந்துள்ள 23- 2 ஆவது இராணுவ கட்டளைத் தலைமையக வளாகத்திற்குள்ளேயே இந்த புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் கடமையாற்றும் இராணவ சிப்பாய்கள் மத வழிபாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் இந்த புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யபடப்டுள்ளதாக இது தொடர்பாக தெரிவிக்கப்படுகின்றது வெலிக்கந்தை பாலகாராம பௌத்த நிலையத்தைச் சேர்ந்த தெல்விட்ட மேதலங்கார தேரோவினால் இச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மத அனுஷ்டானமும் நடை பெற்றது. இந்நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட இராணுவத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும கலந்து கொண்டனர்.
Average Rating