கிழக்கு சிறுவர் படுகொலையுடன் ரிஎம்விபி எனும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு -பிரதி காவல்துறை மா அதிபர்!
கிழக்கில் இடம்பெற்று வரும் சிறுவர் படுகொலைச் சம்பவங்களுடன் தமிழ் மககள் விடுதலைப் புலி (ரிஎம்விபி) உறுப்பினர்களுக்கு நேரடித் தெடர்பு காணப்படுவதாக பிரதிக் காவல்துறை மா அதிபர் எடிசன் குணதிலக்க தெரிவித்;துள்ளார் இச் சம்பவங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இது உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் அண்மையில் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று கப்பம் கோரி பின்னர் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் எவ்வாறெனினும் திட்டமிட்டவகையில் நடைபெற்றுவரும் இவ்வாறான பாதகச்செயல்கள் மீண்டும் தலைதூக்க காவல்துறையினர் அனுமதியளிக்க மாட்டார்கள் இதேவேளை சிறுவர் படுகொலைச் சம்பவங்களுடன் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லையென தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
News From.. www.athirady.com
Average Rating